Header Ads



'பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து' என்ற சுவரொட்டியை ஏந்தியபடி பாராளுமன்றத்திற்குள் SJB போராட்டம்


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து' என்ற சுவரொட்டியை ஏந்தியபடி இன்று நாடாளுமன்ற சபா பீடத்துக்குப் பிரவேசித்தனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளில் செம்மஞ்சள் நிற பட்டி அணிந்துள்ளனர்.

அத்துடன், ரோஹினி விஜேரத்னவும் செம்மஞ்சள் நிற புடவை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இன்று (25) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புத் தினமாகும்.

அதனை முன்னிட்டும், கடந்த சனிக்கிழமை பாதீட்டு விவாதத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன தொடர்பில் சக நாடாளுமன்ற உறுப்பினரான ஜானக திஸ்ஸகுட்டியாரச்சி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் குறித்த இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


No comments

Powered by Blogger.