Header Ads



´இந்த சாபம் இப்போது போதும்´அரசாங்கத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம் - பொலிஸார் தாக்கல்செய்த மனுக்கள் நீதிமன்றங்களினால் நிராகரிப்பு


´இந்த சாபம் இப்போது போதும்´ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

குறித்த ஆர்ப்பாட்டத்தை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்ட நடத்துமாறு உத்தரவு பிறக்குமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த சில மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளது. 

எவ்வாறாயினும் மக்கள் சுகாதார பாதுகாப்பை கவனத்திற் கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு இடமளிக்க போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

சுகாதார நடைமுறைகளை மீறி கொழும்பிற்கு வந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.