Header Ads



புதிய சுகாதார வழிகாட்டல் ​கோவை வெளியானது - மறு அறிவித்தல் வரை ஒன்றுகூடல், கூட்டங்கள், விழாக்கள் என்பனவற்றுக்கு அனுமதியில்லை


நாளை (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் பிரகாரம்,

⭕ தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை பொது மக்கள் ஒன்றுகூடுல், கூட்டங்கள் மற்றும் விழாக்கள் என்பனவற்றுக்கு அனுமதியில்லை

அதற்கமைய, தனிப்பட்ட கூட்டங்களின் போது மண்டபமொன்றில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த எண்ணிக்கை 100 ஐ தாண்டக்கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

⭕ தனிநபர் ஒருவரின் வீட்டில் ஒன்றுகூடுவதாக இருந்தால் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

⭕ வௌியிடங்களில் தனியார் ஒன்றுகூட அனுமதி இல்லை

புதிய சுகாதார வழிகாட்டல் கோவைக்கு அமைய செயற்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

⭕ மத வழிபாட்டுத் தலங்களில் தனித்தனியாக வழிபாடுகளில் ஈடுபட அனுமதி

⭕ சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாகவே விசேட நிகழ்வுகள், பிரார்த்தனைகள் என்பன நடத்தப்பட வேண்டும்

⭕ கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புகளுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புகள் 50 வீதமானவர்களின் பங்குபற்றலுடன் நடத்தப்பட வேண்டும்.

⭕ திருமண நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்படாதவர்கள் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் மதுபான பாவனைக்கு அனுமதியில்லை

⭕ பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி

⭕ திரையரங்குகளில் 50 வீதமானோருக்கு அனுமதி

உள்ளிட்ட வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

1 comment:

  1. வழிபாட்டுக்கு மட்டும் உண்மை யான கட்டுப்பாடு தொடர்ந்து கொண்டு வருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.