Header Ads



ஓமானில் புதிய தர இலங்கைத் தேயிலையை, தூதுவர் அஜ்வத் அறிமுகம் செய்துவைத்தார்


(மனாஸ் ஹுசைன் )

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் O. L. அமீர் அஜ்வத் அவர்களினால் புதிய தர இலங்கைத் தேயிலை, “Soo Chai” ஓமான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மஸ்கட்டில் உள்ள ஓமான் தேசிய வங்கி (NBO) கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம் பெற்றது. 

இலங்கையின் Soo Group (pvt) Ltd கம்பனித் தயாரிப்பான  “Soo Chai” மசாலா தேயிலை 10 க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தரும் வாசனைத் திரவியங்களடங்கிய புதிய தர இலங்கைத் தேயிலையாகும். 

Soo Group (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷான் அபேவர்தன, “Soo Chai” மசாலா தேயிலையின் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைத்தார். புதிய இலங்கைத் தயாரிப்பான “Soo Chai” ஓமானிலுள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் மசாலா டீ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஈர்த்தது. 

இலங்கை தூதரகம்

மஸ்கட்


1 comment:

  1. இலங்கை பொருட்கள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் விலை மிக அதிகம் . அதனால் எமது நாட்டவர்களே அவற்றை புரக்கனிக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.