Header Ads



அதிபர் - ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற, இளம் ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு


அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் இணைந்து நேற்றைய தினம் தேசிய தின போராட்டத்தை முன்னெடுத் திருந்தனர்.

இலங்கையிலுள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் தெனியாய, கொட்டப்பொல பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த போதே குறித்த இளம் ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வருணி அசங்க (வயது-27) என்ற இளம் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த ஆசிரியைக்கு 13 வயதில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.