Header Ads



ஆவேசத்தினால் வெற்றி பெற முடியாது, எமது வேலைத்திட்டம் சுபீட்சமான நாடும், சௌபாக்கிய மிக்க தேசமாகும் - சஜித்


தமது வேலைத்திட்டம் அனைத்தும் சுபீட்சமான நாடும் சௌபாக்கிய மிக்க தேசமாகும் என்றும் அது ஒருதரப்பினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்காது என்றும் நாட்டின் ஒட்டு மொத்த குடிமக்களையும் அடிப்படையாக கொண்டதாக அமையும் வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.  

உணர் திறனும், நாட்டின் மீது அக்கறையும், நேரடியான வேலைத்திட்டமும், மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும், இதயமும் நல்லுள்ளமும் கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மக்கள் மயப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமே இன்று நாட்டின் தேவையாக இருக்கின்றது என்பதனையும் அவர் சுட்டிககாட்டினார். 

திஸ்ஸமஹாராம இணை அமைப்பாளர் டி.வி.கே.காமினியின் கட்சி அலுவலகத்தை இன்று (07) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆவேசத்தாலும் ஆக்ரோசத்தாலும் நாடு இருக்கின்ற நிலையில் இருந்து நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து, மனித வளத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமே எமது நாடு முன்னேற முடியும் என சுட்டிக்காட்டினார். 

பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியுமாக அமைவது ஆவேசம், வைராக்கியம், குரோதம் போன்ற செயற்பாடுகளால் அன்றி கலந்துரையாடல், கருத்துப்பரிமாற்றத்தில் இணக்கம் காணல், கருத்துக்களுக்கு செவிசாய்த்தல்,ஜனநாயகம் போன்ற மனிதாபிமான மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் மூலமே என்பதை சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித் தலைவர் அதற்கு நெருங்கிய உதாரணமாக பத்து ராஜ கட்டளைகளை எடுத்துக்காட்டினார்.


தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அறிந்து வைத்துள்ளதால் அது தொடர்பில் பேசுவதில் பயனில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.