Header Ads



ஐ.நா. பிரதிநிதிகளுடன் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் பேச்சு


ஐ.நா. சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதிச்  செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான ஐநா வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, வியாழக்கிழமை (24) கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் சந்தித்து, முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , சமகால அரசியல் சூழ்நிலை என்பன குறித்து கலந்துரையாடினர்.




No comments

Powered by Blogger.