Header Ads



ஒரேநாடு ஒரேசட்டம் ஜனாதிபதி செயலணி - மக்களின் ஆலோசனைகளைப் பெற தீர்மானம்


ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.

நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்த ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகக் குறித்த யோசனைகளை முன்வைக்க முடியும்.

இதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்க விரும்புவோர் coi.consulations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்ப முடியும்.

அத்துடன், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, அஞ்சல் பெட்டி இலக்கம் 504, கொழும்பு என்ற முகவரிக்குக் குறித்த ஆலோசனைகளை எழுதி, அனுப்ப வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த செயலணியின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக அதன் தலைவர் அபஸரணயை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு உடனடியாகக் கேட்கவேண்டும். பல்லிண ஐக்கியத்துக்கு உள்ள ஒரே வழிஅதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.