Header Ads



எனது உயிர் பிரிய முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென அம்பலப்படுத்துவேன் - என்னை எப்படியாவது உள்ளே தள்ளிவிட முயற்சி


- பாலித ஆரியவன்ஸ   -

தனது உயிர் போகும் முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, இந்த அரசாங்கம் மீது அதிகமாக தாக்குவதால் தனக்கும் மனுஷ நாணயக்காரவுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.  

நேற்று முன்தினம் (21) பதுளையில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து தெரிவித்த அவர்,  “சில காரணங்களை அம்பல்படுத்த வேண்டியுள்ளது. இம்முறை போகும் போது பாரிய ஆபத்தான நிலையொன்று ஏற்பட்டுள்ளது“ எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சேறு பூசப்பட்டது. அதனால் தான் தனக்கு கொழும்புக்குச் செல்ல நேரிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களுக்கு பதுளையில் இருந்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தன் மீது முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களால் தனது பிள்ளைக்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடந்தது. இந்த நாட்டுக்கு பாரிய சாபம் ஒன்று ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.  

தன்னை எப்படியாவது உள்ளே தள்ளிவிட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், “நான் இன்று கூறுகிறேன். இந்த தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை தான் நிரூபிப்பேன். தனது மூச்சு நிற்கும் முன்னர் அதனை செய்வேன்“ என்றார்.

No comments

Powered by Blogger.