Header Ads



இந்திய முஸ்லிம்களின் தியாக வரலாற்றில், "ரயில் பெட்டி படுகொலை"


இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் இரத்தம் கொண்டு எழுதப்பட்ட பக்கங்களில் ஒன்றான "ரயில் பெட்டி படுகொலை" -Wagon Tragedy 19.11.1921 நடந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சிறிதும் குறைவில்லாத 97 முஸ்லிம்களுடன் 3 ஹிந்துக்களையும் துடிக்க துடிக்க படுகொலை செய்த வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகிறது..

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீவிரமாக களம் கண்ட மலபார் புரட்சியின் நாயகர்களை கைது செய்து அடைக்க மலப்புறம் மாவட்டத்தில் சிறைகளில் இடமில்லாத காரணத்தால் ரயிலில் ஏற்றி அனுப்ப பரங்கியரின் அதிகாரிகள் முடிவு செய்தனர்..

திரூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் Madras and South Maratta MSNCV 1711 எனும் ரயிலில் ஒரு சரக்கு பெட்டியில் நூறு பேரையும் அடைத்து கதவை தாழிட்டு அனுப்பி வைத்தனர்.

சுமார் 180 கிமீ தூரம் பயணித்த ரயில் போத்தனூர் நிலையத்தை அடைந்த போது ரயிலில் காற்று புகுவதற்கு வழியின்றி சுவாசம் கிடைக்காமல் மூச்சு திணறி பலியான கொடூரம் நிகழ்ந்தது..

மலபார் புரட்சியின் வீரர்கள் செத்து மடிந்த விஷயம் கேள்விப்பட்ட அடுத்த கோச்சில் அமர்ந்திருந்த ஆங்கிலேய அதிகாரிகள் உரத்த சப்தமிட்டு சிரித்து மகிழ்ந்தவாறு போத்தனூர் நிலையத்தில் இறக்க முயல, ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட ரயில் மீண்டும் நூறு சடலங்களுடன் திரூர் நோக்கி திருப்பி விடப்பட்டது..

திரூர் ரயில்வே பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்திருந்த தங்கள் உறவினர்களின் ஷஹீதான ஜனாசாக்களை கேட்டு பெறுவதற்கு கூட அச்சப்பட்ட சூழலில், பெருவணிகராக இருந்த கைணிக்கர மம்மு ஹாஜி ஆட்சியர்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஜனாஸா அடக்கம் செய்ய பிரிட்டிஷ் ஆட்சியர்கள் அனுமதி வழங்கினர்..

திரூர் அருகில் உள்ள கோரங்ஙத்து ஜும்மா மசூதி வளாகத்தில் 44 ஜனாசாக்களும், மீதமுள்ள ஜனாசாக்கள் கோட்டூ மசூதி வளாகத்திலும் அடக்கம் செய்யப்பட்டனர்.

மூன்று ஹிந்துக்களின் சடலங்கள் மூத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலை போராட்டத்தில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாக வரலாற்றில் முக்கியமான பக்கங்களை கொண்டது 1921 ரயில் பெட்டி படுகொலை @ Wagan Tragedy...

44 ஷஹீத்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் எனும் அறிவிப்பு போர்டுடன் அந்த வளாகம் இன்றும் திரூர் கோரங்ஙத்து மசூதி வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது..

Azheem

1 comment:

  1. இந்தியயாவை முஸ்லிம்கள் ஆண்டதையே தற்போதய இந்திய முஸ்லீம் கள் மறந்து விட்டு அழ்ழாஹ் வுக்கு அச்சப்பட வேண்டியவாறு மோடிக்கு அச்சப்படுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.