Header Ads



பாராளுமன்றத்தில் பெண் எம்.பிக்களுக்கு துன்புறுத்தல் - சபாநாயகருக்கு கடிதம்


பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வார்த்தை ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகரிடம் கோரியுள்ளது.

அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்யும் பெண்களான மக்கள் பிரதிநிதிகள், அவ்விடத்திலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு சீரழிவை ஏற்படுத்துவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.