மண்டையோடு கண்டுபிடிப்பு - டாம் வீதியில் தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணுடையதா என விசாரணை
படல்கும்புர - பசறை பிரதான வீதியின் அலுபொத பிரதேசத்தில் மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
11ஆவது கிலோமீற்றல் கல்லுக்கு அருகில் உள்ள பாழடைந்த பகுதியொன்றிலிருந்து இந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு டேம் வீதியில், பயணப்பையொன்றிலிருந்து தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் மீட்க பெண்ணின் சடலத்திற்கும் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
Post a Comment