Header Ads



அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் - மைத்திரியின் மகன் அறிவிப்பு


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன (Daham Srisena)தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

தஹாம் சிறிசேனவை தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி சத்துரிகா சிறிசேனவும் கடந்த காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tw

1 comment:

  1. சரியான புத்தியும் நல்ல சிந்தனையும உள்ள எந்தவொரு நபரும் இந்த கள்ளனின் மகனுக்கு ஒரு வாக்கேனும் அளிக்கவேண்டாம் என நாட்டின் நன்மைகருதி நாம் உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். மைதிரி வந்து அவருடைய மகளையும் மகனையும் பெரும் கள்வர்களாக உருவாக்கி இறுதியில் அவர் மிகப் பெரும் கள்ளனாகவும் இறுதியில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிறைக்கைதியை விடுதலை செய்யும் அளவுக்கு கேடுகெட்டவனாகவும் மாறினான் என இலங்கையின் பல பத்திரிகைகள் தெரிவித்தன. அந்த செய்தியை பொதுமக்கள் பார்வைக்காக ஞாபகப்படுத்துகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.