Header Ads



ஒமிக்ரோன் வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது - இலங்கை வைத்தியர்கள் சங்கம்


உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ், இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது என இலங்கை வைத்தியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

விரைவான நடவடிக்கைகளை எடுத்து ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை காலத்தாமதப்படுத்த முடியும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 

ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்கு வருவதை காலத்தாமதப்படுத்தி, அக்காலப் பகுதியில் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.