புத்தகத்தை சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான்: பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் பந்துல
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன 2015 ஆம் ஆண்டு பொருளாதாரம் சம்பந்தமாக எழுதிய நூல் ஒன்றை மேற்கோள்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பிக்கும் போது பந்துல அவையில் இருந்து வெளியேறியுள்ளார்.
பந்துல குணவர்தன அன்று வெளியிட்ட நூலில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக பொது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படும் விதத்தை விபரித்துள்ளதாகவும் அது தற்போது சரியாக பொருந்துவதாகவும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் பந்துல குணவர்தன அன்று பொருளாதாரத்தை விபரித்தது போல், தற்போது விபரிப்பதில்லை. அதற்கு பதிலாக புதுவிதமான பொருளாதார விஞ்ஞானத்தை அவர் தற்போது கூறுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். TW
நல்ல அணுகுமுறை.
ReplyDeleteஇவ்வாறு சிறந்த ஆதாரங்கள் உடன் கூறப்படும் விடயங்கள் மக்களிடம் எடுபடும்.