Header Ads



எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும், தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது


எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இரண்டரை வருடங்களுக்கு பின்னர் தான் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களை வீதிக்கு அழைப்பது ஒரு வீரச் செயல் அல்ல, இது வருந்தத்தக்கது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், மக்களைப் பாதிக்காமல், புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.