Header Ads



பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்தார் மஹிந்த சமரசிங்க


மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகமான தம்மிக்க தசநாயக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பதவி விலகல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) வது பிரிவின்படி, தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு பாராளுமன்ற பொது செயலாளரால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று கையளித்தார்.

1 comment:

  1. Wow.i surprised in the FIRST.
    BUT FINALLY I DISSAPOINTED.

    ReplyDelete

Powered by Blogger.