Header Ads



வானும் டிப்பரும் நேருக்கு நேர் மோதல் - விபத்தில் 4 பிக்குகள் உட்பட ஐவர் படுகாயம் (படங்கள்)


கந்தளாய்  பிரதேசத்தில்  வானும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நான்கு  பிக்குகள் உட்பட  ஐவர்  படுகாயமடைந்த நிலையில், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து திருகோணமலை, கந்தளாய் - கண்டி வீதியின் 87ஆம் மைல் கல்லில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,  ஹபரணையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், சேருவில விகாரையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

சேருவில விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பிக்குகள் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தின் போது 10 பிக்குகள் உட்பட 19 பேர் வானில்  இருந்ததாகவும்  கந்தளாய்  பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பிக்குகளில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலுமுதீன்  கியாஸ் 


No comments

Powered by Blogger.