Header Ads



4 கிலோ கேரள கஞ்சாவுடன், பாடசாலை மாணவர் சிக்கினார்


மன்னாரில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை நேற்று (02) காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

மன்னார் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூர் வீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த மாணவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவரிடமிருந்து 4 கிலோ 700 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரான மாணவர் என்ன நோக்கத்தில் சட்டவிரோத போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தார் என்பது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மன்னார், தள்ளாடி பகுதியில் ஒரு கிலோ 665 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான சந்தேகநபரை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.