Header Ads



கிண்ணியா விபத்தில் வபாத்தனவர்களின், முதற்கட்ட விபரம் வெளியாகியது - ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு


திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்த பலர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  

  இச்சம்பவத்தில், சப்ரியா (30 வயது)  என்ற முன்பள்ளி ஆசிரியரும் அவரது முன்பள்ளியில் பயிலும் மகனான சேகுசகி (3 வயது) அடங்குகின்றனர்.  பாத்திமா சகிலா (6 வயது), பரீஸ் பஹி (6 வயது), பாத்திமா சிரின் (8 வயது) ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு சேகு அப்துல் காதர் (70 வயது) என்ற வயோதிபரும் உயிரிழந்துள்ளார்.

2

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முப்பது வயது தாய், ஆறு வயது மகன், மூன்றரை வயது மகள் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.