Header Ads



வீட்டின் பூச்சாடியில் 3 அடி நீளமான கஞ்சா செடிகளை வளர்த்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல்


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பூச்சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) உத்தரவிட்டார். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தலைமையக போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவதினமான நேற்று முன்தினம் குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். 

இதன்போது வீட்டின் பூச்சாடி இரண்டில் 3 அரை அடி மற்றும் 2 அரை அடி உயரமான கஞ்சா செடியை வளர்த்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 19 வயது இளைஞனை கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 25 திகதி வரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


No comments

Powered by Blogger.