Header Ads



டுபாயில் கோடிக்கணக்கான பணத்தை வென்றவர், இலங்கை பாடசாலைகளுக்கு அன்பளிப்பு


துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை - மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.

துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார்.

இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார்.

இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. You have set such a great example for others, Brother!

    ReplyDelete

Powered by Blogger.