Header Ads



மைத்திரி செய்ய நினைத்ததை ரணிலும், ரணில் செய்ய நினைத்ததை மைத்திரியும் தடுத்தனர் - சுமந்திரன் குற்றச்சாட்டு


நல்லாட்சிக் காலத்தில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன  செய்ய நினைத்ததை அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க  தடுத்தார், ரணில் செய்ய நினைத்ததை மைத்திரி தடுத்தார் என்பது எல்லாம் இப்போதுதான் எமக்குத் தெரியவருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

சமஷ்டி முறைமையினை ஏற்றுக் கொள்ளக் கூடிய சிங்களத் தலைவர்களும் உள்ளனர். ராஜித சேனாரத்ன மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல  ஆகியோர் இன்றும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூறிக் கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.