நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு பஞ்சத்திற்கு மட்டுமல்ல, கலவரங்களுக்கும் வழிவகுக்கும் - சம்பிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு பஞ்சத்திற்கு மட்டுமல்ல, கலவரங்களுக்கும் வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய உர நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சேதன விவசாயத்தை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறைந்தபட்சம் 1% அறுவடையையாவது சரியான முறையில் முன்னெடுக்குமாறு அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சவால் விடுத்தார்.
விவசாயிகளுக்கு முறையான உரங்கள் வழங்கப்பட வேண்டும், சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் உரம் அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் பெரும் போக விவசாயம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து கொள்ளவும், இல்லையெனில் இலங்கை பஞ்சத்திற்கு மாத்திரம் ஆளாகாது,, கலவரமான சூழ்நிலைக்கும் உட்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment