Header Ads



எனக்கு அரசியல் அனுபவம் குறைவு, பிரதமர் அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் - ஜனாதிபதி


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகால வரலாற்றைக் கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பல வருட அரசியல் அனுபவத்தைக் கொண்ட பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை உள்வாங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TL

2 comments:

  1. உண்மை பேசவும் நேர்மையாகவும் மக்களின் தேவைகளை அடிப்படையாக ஆட்சி செய்யும் உலகத்தில் தலைசிறந்த ஆட்சியாளர்கள் இவர்கள் என்பதை இன்னும சில நாட்களில் உலகம் பறைசாற்றும்.

    ReplyDelete

Powered by Blogger.