Header Ads



தாக்குதல்களுடன் ஹிஜாஸுக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால், அரசியலில் இருந்து ஒதுங்குவேன் - சவால் விடுக்கிறார் ரெஹான்


குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஒரு நிர­ப­ராதி என்றும் அவரை விடு­விப்­ப­தற்­காக குரல் கொடுக்­கு­மாறும் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளிடம் காணொளி மூல­மாக சிங்­கள, ஆங்­கில மொழி­களில் அழைப்பு விடுத்­துள்ளார். வெலி­கம நகர சபையின் முன்னாள் தவி­சா­ளரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் இளைஞர் அணி பிரதித் தலை­வ­ரு­மான ரெஹான் ஜய­விக்­ரம. அதன் தமிழ் வடி­வத்தை ‘விடி­வெள்ளி’ வாச­கர்­க­ளுக்­காக தரு­கிறோம்.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் இன்று அனை­வ­ராலும் அறி­யப்­பட்ட ஒரு­வ­ராக இருக்­கிறார். அவ்­வாறு அவர் அறி­யப்­பட்­டி­ருப்­ப­தற்கு காரணம் அவர் ஒரு சிறந்த சட்­டத்­த­ரணி என்­பதோ, ஒரு சிறந்த கல்­விமான் என்­பதோ, ஒரு சிறந்த சமூகப் பணி­யாளர் என்­பதோ அல்ல. மாறாக அவர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­யவர் என குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­தனால் ஆகும்.

நான் இன்று ஹிஜாஸ் தொடர்பில் என்­னிடம் உள்ள ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்கள் சில­வற்றை பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன். நான் கூறு­வது பொய் என்று நீங்கள் எவ­ரா­வது கரு­தினால் நீங்கள் எந்­த­வொரு நீதி­மன்­றத்­துக்கும் சென்று முறை­யிட முடியும். நான் எந்­த­வொரு பொலிஸ் நிலை­யத்­திற்கோ அல்­லது சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் முன்­னி­லை­யிலோ உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ முன்­னி­லை­யாகி ஹிஜாஸ் ஒரு நிர­ப­ராதி என்­பதை நிரூ­பிக்க தயா­ரா­க­வுள்ளேன்.

‘சேவ் த பேர்ள்’ நிறு­வனம் தொடர்பில் முதலில் சில விட­யங்­களை கூற விரும்­பு­கிறேன். ஒரு பொய்யை திரும்­பத்­தி­ரும்ப கூறினால் அது உண்­மை­யா­கி­விடும் என்று சொல்­வார்கள். பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர இத­னைத்தான் செய்து வரு­கிறார்.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சேவ் த பேர்ள் நிறு­வ­னத்தின் முக்­கிய அங்­கத்­த­வர் என பல தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் தோன்றி சரத் வீர­சே­கர கூறி வரு­கிறார். சேவ் த பேர்ள் பல முஸ்லிம் நாடு­களின் உத­வி­யுடன் முஸ்லிம் சமூ­கத்­திற்கு உதவி வரு­கி­றது.

ஒரு விகா­ரையால் குழு ஒன்று அமைத்தால் அதில் நீங்கள் முஸ்­லிம்­களை உறுப்­பி­னர்­க­ளாக உள்­வாங்­கு­வீர்­களா? அப்­படிச் செய்­ய­மாட்­டீர்கள். அதே­போன்­றுதான் சேவ் த பேர்ள் ஒரு முஸ்லிம் அரச சார்­பற்ற நிறு­வனம். எனவே அவர்கள் முஸ்­லிம்­க­ளையே அதன் நிர்­வா­கி­க­ளாக நிய­மித்­தி­ருக்­கி­றார்கள். இந்த நிறு­வ­னத்தில் அங்கம் வகிக்கும் ஏனை­ய­வர்­க­ளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஹிஜாஸ்தான் இதனை ஆரம்­பித்­தவர் என சிலர் கருதிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஜாமிஆ நளீ­மி­யாவின் பிரதிப் பணிப்­பாளர் அகார் முகம்மத், சுகா­தார அமைச்சின் மேல­திக பணிப்­பாளர் வை.எல்.எம்.நவவி, தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத், வாமி நிறு­வ­னத்தின் முன்னாள் பணிப்­பாளர் நஜ்மான் உட்­பட மேலும் பலர் இதன் முகா­மைத்­துவ சபையில் அங்கம் வகிக்­கி­றார்கள்.

நான் மேலே பெயர் குறிப்­பிட்ட இவர்கள் அனை­வரும் இந்த நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ சபையில் அங்­கத்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அதற்­காக இவர்­களும் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்று யாரா­வது கூற கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா? அமைச்சர் சரத் வீர­சே­கர இவர்­களும் குற்­ற­வா­ளிகள் என்று எங்­கா­வது கூறி­யி­ருக்­கி­றாரா? அப்­ப­டி­யானால் ஏன் இந்த நிறு­வ­னத்தில் அங்­கத்­த­வ­ராக இருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவை மாத்­திரம் குற்­றம்­சாட்ட வேண்டும்?

இந்த அர­சாங்கம் சேவ் த பேர்ள் நிறு­வ­னத்தின் பெயரைக் கூறி, ஹிஜாஸ் அதன் உறுப்­பினர் என்­பதால் அவரைக் கைது செய்­துள்­ள­தாக கூறு­கி­றது. இதனை நம்பி சமூக வலைத்­த­ளங்­களில் கருத்துப் பதி­வி­டு­வோரும் கூட ஹிஜாஸ்தான் சேவ் த பேர்ள் நிறு­வ­னத்தின் தலைவர் எனக் கூறு­கின்­றனர்.

இப்­பொ­ழுது உங்­க­ளுக்கு சேவ் த பேர்ள் நிறு­வனம் பற்றி நன்கு தெரிந்­தி­ருக்கும் என நினைக்­கிறேன். மேல­திக விப­ரங்கள் தேவை எனில் அதன் இணை­யத்­தளம் ஊடாக அறிந்து கொள்­ளலாம்.

அடுத்­த­தாக இந்த அமைப்பின் நிர்­வா­கத்தில் அங்கம் வகிக்கும் மற்­றொரு மிக முக்­கி­ய­மான நபர் குறித்து நான் குறிப்­பிட வேண்டும். அவர்தான் முன்னாள் சிரேஷ்ட புல­னாய்வு அதி­காரி எஸ்.எஸ்.பி. மஹி டோல். அவர் இலங்­கையின் மிக முக்­கிய புல­னாய்வு அதி­கா­ரி­களில் ஒருவர். இந்த நாட்­டுக்கு பெரு­மை­தே­டித்­தந்­தவர் அவர். அவரும் சேவ் த பேர்ள் நிறு­வ­னத்தில் அங்கம் வகிக்­கிறார். 2015 ஆம் ஆண்டு தான் பத­வியில் இருக்கும் போதே, ஸஹ்ரான் அங்கம் வகித்த தீவி­ர­வாத தௌஹீத் குழுக்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என முதன் முத­லாக அப்­போ­தைய அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யவர். இதற்­க­மைய இந்த தீவி­ர­வாதக் குழுக்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றிய அர­சாங்கம், இன்று ஹிஜாஸை கைது செய்து சிறை­யி­ல­டைத்­தி­ருப்­ப­துதான் வேடிக்­கை­யா­ன­தாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் ஹிஜா­ஸுக்கும் தொடர்­புள்­ள­தாக யாரோ சிலர் கூற, அதனை நம்பி இந்த முட்­டாள்கள் ஓர் அப்­பா­வி­யான ஹிஜாஸை கைது செய்து ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைத்­தி­ருக்­கி­றார்கள்.

இதுவே உங்கள் சகோ­த­ர­ருக்கு, சகோ­த­ரிக்கு, தாய்க்கு, தந்­தைக்கு, மாமா­வுக்கு, மாமிக்கு நடந்தால் எப்­ப­டி­யி­ருக்கும்? நீங்கள் ஹிஜாஸ் விட­யத்தில் அனு­தா­பப்­பட வேண்டும். பச்­சா­தா­பப்­பட வேண்டும். இன்று இவர்கள் இந்த மனி­த­ருக்கு எதி­ராக இப்­படி நடந்து கொள்­கி­றார்கள். இது பற்றி நாம் உரத்துப் பேசா­விட்டால் அவர்கள் நாளை நமக்கு எதி­ரா­கவும் இத­னைத்தான் செய்­வார்கள். அவ்­வாறு நமக்கு எதி­ராக எதுவும் நடந்தால் ஹிஜா­ஸுக்கு எதி­ராக பேசு­வோரும் நமக்­காக பேச வர­மாட்­டார்கள்.

நீங்கள் ஹிஜா­ஸுக்கு ஆத­ர­வாகப் பேசினால், நாளை நமக்கு எதுவும் நடந்தால் நிச்­ச­ய­மாக ஹிஜாஸ்தான் முதல் மனி­த­ராக நமக்­காக குரல் கொடுப்பார் என்­பதை நான் உறு­தி­படக் கூறு­கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் ஹிஜா­ஸுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக பாரிய பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இச் சம்­பவம் தொடர்பில் விசா­ரிக்க இதே அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் எந்­த­வொரு இடத்­தி­லா­வது ஹிஜாஸின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தால் அதனை எனக்கு காண்­பிக்­கு­மாறு நான் சவால் விடு­கிறேன்.

அவர் குற்­ற­வா­ளி­யென எங்­கா­வது ஓரி­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது என நீங்கள் நிரூ­பித்தால், எனது சகல அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்தும் ஒரு மணி நேரத்­திற்குள் ஒதுங்கிக் கொள்வேன் என சவால் விடு­கிறேன்.

ஆணைக்­குழு அறிக்­கையை ஒரு புறம் வைத்­து­விட்டு, ஹிஜாஸ் மீது அண்­மையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட குற்­றப்­பத்­தி­ரிகை தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­துவோம். அந்த அறிக்­கையில் ஏதேனும் ஒரு பகு­தி­யி­லா­வது ஹிஜா­ஸுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கும் சம்­பந்தம் இருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பதை நீங்கள் காண்­பித்தால் நான் மீண்டும் சகல அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்தும் ஒரு மணி நேரத்­திற்குள் ஒதுங்கிக் கொள்­வ­தா­கவும் எனது கட்­சியால் எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள சகல பதவி­க­ளையும் இரா­ஜி­னாமாச் செய்­வ­தா­கவும் இங்கு வாக்­கு­று­தி­ய­ளிக்­கிறேன்.

இந்த இடத்தில் சட்­டமா அதி­ப­ரி­டமும் முக்­கி­ய­மான வேண்­டு­கோளை முன்­வைக்க விரும்­பு­கிறேன். இது ஒரு பௌத்த நாடு. நாங்கள் இன்று செய்­கின்ற செயல்கள் நாளை நமக்கு எதி­ரா­கவே திரும்பும் (கர்மா) என்­பதை நாம் நம்­பிக்கை கொண்­டுள்ளோம். எனக்கு பிள்­ளைகள் இருக்­கி­றார்கள். அதனால்தான் நான் ஹிஜாஸுக்காக உண்மையைப் பேசுகிறேன். இன்னும் பிள்ளைகள் உள்ள, பிள்ளைகள் இல்லாத ஆயிரக் கணக்கானோரும் ஹிஜாசுக்காக பேசுவதும் இதனால்தான்.

தயவு செய்து ஹிஜாஸுக்கு பிணை வழங்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டாம். ஹிஜாஸை பிணையில் விடுவிப்பதற்கு அவர் சார்பாக நான் சான்றுறுதியளிக்க வேண்டும் என நீங்கள் கருதினால் உங்கள் அலுவலகத்துக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ வந்து அதனைச் செய்வதற்கும் நான் தயாராகவிருக்கிறேன். அரசாங்கத்தில் உள்ள ஏனைய தரப்பினருக்கும் ஹிஜாஸ் ஓர் அப்பாவி என்பதை நீங்கள் புரிய வைப்பீர்கள் என நம்புகிறேன்.

ஹிஜாஸை விடுவிப்பதற்கான போராட்டத்தில் அனைவரையும் எம்முடன் கைகோர்க்குமாறும் அழைப்புவிடுக்கிறேன்.-Vidivelli

2 comments:

Powered by Blogger.