Header Ads



பண்டோரா பேப்பர்ஸ் இரகசிய ஆவணம் - இன்னும் சில இலங்கையர்களின் பெயர்கள் கசியவுள்ளதா..?

உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பண்டோரா பேப்பரஸ், இலங்கை அரசியல் மட்டத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

இரகசிய கொடுக்கல் வாங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணம்


பதுக்கியுள்ள மேலும் பல இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளாதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக எதிர்வரும் நாட்களில் இந்த தகவல்கள் வெளியாகவுள்ளது. அதற்கமைய பிரதான தரப்பு அரசியல்வாதிகள் பலரின் பெயர்கள் இதன் மூலம் வெளியே வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல வர்த்தகர்கள் மற்றும் பிரபுக்கள் பலரின் பெயர்களும் இந்த ஆவணங்களுக்குள் உள்ளடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்கள் வெளியானதுடன் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சமகால ஆட்சியாளர்களின் மிகவும் நெருக்கமான இரண்டு உறவினர்கள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் உடாக ஏற்கனவே கசிந்தமை குறிப்பிடத்தக்கது.  TW

No comments

Powered by Blogger.