Header Ads



முஸ்லிம்களை மோச­மாக சாடிய அமைச்­சர்கள் நிதி உத­விகள் வழங்­கு­மாறு இஸ்­லா­மிய நாடு­க­ளிடம் மண்­டி­யி­டு­கின்­றார்கள்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி அல்லாஹ் எனக் குறிப்­பிட்டு பெளத்த குரு ஒருவர் வெளி­யிட்ட கருத்து முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த அனை­வ­ரதும் மனதை நோக­டிக்கச் செய்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை ஆயுதம் ஏந்தச் செய்­வ­தற்­கான கருத்­து­களே இவை. ஊட­கங்­களில் எவ்­வா­றான கரு­த்துக்கள் தெரி­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதை புத்த பெருமான் தெளி­வாகக் கூறி­யுள்ளார் என ஞான­சார தேரர் அண்­மையில் அல்லாஹ் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முக­மாக நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கெக்­கி­ராவே சுதஸ்­ஸன தேரர் தெரி­வித்தார்.

அவர் ஊடக மாநாட்டில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘வடக்கில் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு போராட்­டத்­துக்கு அழைப்­பு­வி­டுத்­தது போன்று குறிப்­பிட்ட தேரர் முஸ்லிம் சமூ­கத்­துக்கு அழைப்பு விடுத்­துள்ளார். அவர்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்ளார். தமிழ் ஈழப்­போரின் போது முஸ்லிம் சமூ­கமே பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு உள­வுத்­த­க­வல்­களை வழங்­கி­யது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்­து­றை­யிலும் முஸ்லிம் சமூகம் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டது. இன்றும் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முஸ்­லிம்கள் பாரிய ஒத்­து­ழைப்­பினை வழங்கி வரு­கி­றார்கள்.

மத்­திய கிழக்கு நாடுகள் எமது பணி­யா­ளர்­களை உள்­வாங்கிக் கொண்­டுள்­ளன. எமது நாட்­டுக்கு அந்­நிய செலா­வணி மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து கிடைக்­கி­றது. இதுவே எமது நாட்டின் பொரு­ளா­தார நிலைமை. ஒரு சில தேரர்­களின் தவ­றான கருத்­து­களால் தவ­றான போக்­கு­களால் அந்­நா­டுகள் எமக்­கான எண்ணெய் ஏற்­று­ம­தியை நிறுத்­தி­விட்டால் எமது நிலைமை என்­ன­வாகும்.

கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்தை மோச­மாக சாடிய அமைச்­சர்கள் நிதி உத­விகள் வழங்­கு­மாறு இஸ்­லா­மிய நாடு­க­ளிடம் மண்­டி­யி­டு­கின்­றார்கள். அரபு நாட்­டுத்­த­லை­வர்­க­ளிடம் முழந்­தா­ளி­டு­கி­றார்கள். பங்­க­ளா­தே­ஷிடம் கடன் வாங்­கு­கி­றார்கள்.இவ்­வாறு உதவி பெற்­றுக்­கொள்­ளும்­போது அவர்­க­ளிடம் இன­வாதம் இல்லை. அரபு நாடு­க­ளி­னதும், முஸ்லிம் நாடு­க­ளி­னதும் தலை­வர்­களை வணங்கி நிதி­யு­தவி பெற்­றுக்­கொண்டு இங்கு வந்து முஸ்­லிம்கள் அனை­வரும் அடிப்­ப­டை­வா­திகள் என்­கி­றார்கள்

எல்­லோ­ருக்கும் சமய கிரந்­தங்­களை விமர்­சிக்க முடி­யாது. குர்­ஆ­னுக்கு விளக்கம் கொடுக்க ஒரு தகுதி வேண்டும். ஒருவர் சமய கிரந்­தங்­களை விமர்­சிப்­ப­தென்றால் அவர் அந்தக் கிரந்தம் உரு­வான சூழல், சமூ­க­நி­லைமை, இது உரு­வான கால அர­சியல் முறைமை என்­பன பற்­றி­யெல்லாம் அறிந்­தி­ருக்க வேண்டும் அல்குர் ஆனில் மனித உரி­மைகள் பற்றி போதிக்­கப்­பட்­டுள்­ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இரண்டு தொலைக்­காட்சி சேவைகள் சில தேரர்­களை அழைத்து குரல் பதி­வு­களை மேற்­கொண்டு அவற்றை அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்­தி­னார்கள். ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது இந்த தொலைக்­காட்சி சேவைகள் மும்­மு­ர­மாக செயற்­பட்­டன. பின்பு பொதுத்­தேர்­த­லின்­போதும் இவ்­வாறே செயற்­பட்­டார்கள். இது ஓர் அர­சியல் நிகழ்ச்சி.

இப்­போது ஏதேனும் ஒரு தொலைக்­காட்சி சேவை இது­பற்றி பேசு­கி­றதா? மீண்டும் தேர்­த­லொன்று வரப்­போ­கி­றது. மாகா­ண­சபைத் தேர்தல், அதன் பின்பு 2,3 வரு­டங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல், தேர்தல் வரும்­போது புதைக்­கப்­பட்­டுள்ள சட­லங்­களைப் பற்றிப் பேசு­வார்கள்.

நான் ஏப்ரல் 21 ஆம்­தி­க­தியே பிறந்தேன். அதனால் நான் இறக்­கும்­வரை உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் எனது நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.

இவ்­வா­றான தேரர்கள் எப்­போதும் இன­ரீ­தி­யான பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவே முயற்­சிக்­கி­றார்கள். ஆனால் உண்­மை­யான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது அப்­ப­டியே இருக்­கின்­றன. இதனால் நாட்டு மக்­களே பாதிப்­ப­டை­கி­றார்கள். இஸ்­லா­மிய புரட்­சி­யொன்று ஏற்­பட்­டதன் பின்பு பல நாடு­களில் பிரச்­சி­னைகள் உரு­வா­கின. இந்த இஸ்­லா­மிய புரட்­சியின் பின்­ன­ணி­யினை ஆராய்ந்து பார்த்தால் அங்கே அர­சி­யலே இருந்­தது இலங்­கை­யிலும் இதுவே நடந்­தது.

பெளத்த குரு­மார்கள் புத்­த­பெ­ரு­மானின் போத­னைப்­ப­டியே ஊட­கங்­களில் கருத்து தெரி­விக்­க­வேண்டும். மாறாக அர­சியல் பின்­ன­ணியைக் கொண்டு கருத்­துக்­கூ­றக்­கூ­டாது. இன­வாதம் பேசக்­கூ­டாது. கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­தலை செய்யும் வகை­யி­லான கருத்­துக்கள் வெளி­யி­டக்­கூ­டாது என்றார்.- Vidivelli

1 comment:

  1. இந்த மிலேச்சத்தனமான திட்டமிடப்பட்ட தாக்குதலால் இலங்கையில் மூன்று இனங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.

    1. கிறிஷ்துவ சமூகத்தின்மீதான நேரடியான கொலைகாரத் தாக்குதல்

    2. தாக்குதலை முஸ்லீம்களின் தலைகள்மீது கட்டுவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட நாசகார வேலைகளால் பாதிக்கப்பட்ட் முஸ்லீம்கள்

    3. இந்த இரு வேலைகளையும் காட்டி சிங்கள மக்களை நம்ப வைத்துக் களுத்தறுத்து அவர்களை ஏமாற்றியது.

    மொத்ததில் இலங்கையில் அனைத்து மக்களும் இத்தாக்குலால் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.