Header Ads



மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகளவில் கொரோனா பரவியுள்ளது - இராஜாங்க அமைச்சர்


மதுபானம் அருந்தும் இடங்களிலேயே அதிகளவில் கோவிட் வைரஸ் பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அப்படியான இடங்களை தற்போது தவிர்ப்பது முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே புதிய வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க சுகாதார அமைச்சு கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது எனவும் தடுப்பூசியையும் மீறிச் செல்லக் கூடிய வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் பரவ முடியும் எனவும் ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.  TW

No comments

Powered by Blogger.