சுமந்திரனுக்கு எதிராக ஹர்த்தால் - உருவ பொம்மை எரிக்கப்பட்டது
குருநகரில், இன்று (26), குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்களால், கறுப்புக் கொடி கட்டப்பட்டு, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளுர் இழுவை படகு மீன்பிடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை எதிர்த்தே, இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, குருநகர, வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
Post a Comment