அசாத் சாலியின் விளக்கமறியல் 9 ஆம் திகதிவரை நீடிப்பு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (25) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
Post a Comment