Header Ads



மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 நீக்கப்படும்


மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

1 comment:

  1. என்ன சொல்ல வருகிறது இச் செய்தி?

    ReplyDelete

Powered by Blogger.