அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் - 31 தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தமது போராட்டம் தொடரும் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் "BIG FOCUS" கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2
தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இன்று (13) தீர்மானித்துள்ளனர்.
பிரதமருடனான நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில், இன்றையதினம் தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனடிப்படையில், இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டிருந்தன.
Post a Comment