Header Ads



வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 20 மஞ்சள் மூடைகள் மீட்பு - 2 பேர் கைது


அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை இன்று (01) அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டது. 

நாவற்குழி மற்றும் அனலைதீவைச் ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

- பிரதீபன் -

No comments

Powered by Blogger.