Header Ads



நாட்டை ஒரே நேரத்தில் திறக்காமல், கட்டம் கட்டமாகத் திறக்க வேண்டும் - Dr சுதர்ஷனி


நாடு கட்டம் கட்டமான முறையிலே திறக்கப்படும்.ஒரே நேரத்தில் திறக்கப்படும் சூழல் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

எனவே நாட்டை ஒரே நேரத்தில் திறக்காமல் கட்டம்கட்டமாகத் திறக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா அவதானம் காணப்படுகின்றமையை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.