Header Ads



அமைச்சர் நாமல் நாளை, யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் விஜயம்


இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமையவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கௌரவ அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது.

கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.மனித உரிமைகள் சபையின் கூட்டம் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் நிலையில் இந்த அபிவிருத்திப் பணிகள் இரவோடு இரவாக மேற்கொள்ளப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.