Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஹம்மது கனி ஜெஸ்மின் (ஓய்வுபெற்ற ஆசிரியை)


யாழ்ப்பாணம் சோனகத் தெருவைப் பிறப்பிடமாகவும், சிலாபம், இல 01, மூவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது கனி ஜெஸ்மின் (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் 25.09.2021, சனிக்கிழமை அன்று காலமானார்கள்.  

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

அன்னார் M.பதுறுஸ்ஸமான் (ஓய்வு பெற்ற அதிபர்) இன் அன்பு மனைவியும், மொஹமட் பர்ஸான் (கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்), பைறோஸா பர்வின் ஆகியோரின் அன்புத் தாயாரும். ஸியா றுக்ஸி, மொஹமட் ஸாபி  ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.  

இவர் காலஞ்சென்ற மர்ஹூம்களான முஹம்மது கனி, ஹக்கீமா ஆகியோரின் அன்பு மகளும், மர்ஹூம்களான பஸீர்(யாழ் முன்னாள் பிரதி மேயர் ), அய்ருத்தீன் ஆகியோரின் சகோதரியும் மற்றும் ஹாமித், அஜ்மதுன்னிஸா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.  

 

தகவல்  மகன் பர்ஸான்.

No comments

Powered by Blogger.