Header Ads



மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிட்டது பேயாக இருக்கலாம் - மைத்திரிபால


மதுபானசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் உத்தி​யோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கலால் வரி திணைக்களமே தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினரால் பதிலளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறி​சேன எம்.பி, புதுக் கதையொன்றை கூறியுள்ளார்.

மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவு வழங்கியது யார் எனக் கேள்வியெழுப்பிய அவர், பேயாக இருக்கலாம் என கிண்டல் செய்தார். மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிட்டது யார் என்றக்கேள்விக்கு சரியான பதில் தெரியாவிட்டால் இதுவே பதிலாகும் என்றார்.

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு பணம் இல்லையெனவும் அதனாலேயே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், எனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயல் என்றார்.

No comments

Powered by Blogger.