Header Ads



மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு உள்ளது - விமல் வீரவங்ச


சில தொழிற்சங்கங்கள் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டாலும், அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களும், மாணவர்கள் குறித்து சிந்தித்து கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக, அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர் பிரச்சினை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சவை உப குழுவின் உறுப்பினரான அவர், இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களிடம் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியர்களுக்கு உள்ளது.

அவர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையாலேயே, அமைச்சரவையில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.