Header Ads



கொவிட் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் இசை நிகழ்ச்சி - இன்று பிலியந்தலையில் ஆரம்பம்


கொவிட் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை சுகாதார ஊழியர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் மன நலத்தைப் பேணவும் என நாடளாவிய ரீதியில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த 'ஆசிரி ஹதவத எகமுத்துவ' என்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதன்படி அவர்களது பணி ஆரம்ப விழா இன்று -10- பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது. 

குறித்த இசைக்குழுவின் பாடல்களுக்கு தாதியர்களும் பாடி நடனமாடினர். நோயாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சோர்வு மற்றும்  மன அழுத்தத்திலிருந்து விடுபட இது பெரிதும் பங்களித்ததாகக் கூறப்படுகிறது. TL

No comments

Powered by Blogger.