Header Ads



ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான, அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் - மைத்திரி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம் என லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கையின் 4ஆவது பிரதமருமான அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினம் முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஹொரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்கவின் நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தினார்.

சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதன்போது மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,.. தற்போதைய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிச் செயற்பட்டு வருகின்றோம். பண்டாரநாயக்கவின் வழியில் அவரின் கொள்கைகளைப் பின்பற்றிப் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உரிய கௌரவமாக அமையும். எனவே, அவரின் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் என்பது இந்த நாட்டின் எதிர்காலமாகும் என்றார்.

1 comment:

  1. மைதிரியின் களவு, படுகொலை, பகற்கொள்ளைகளை மறைத்துக் கொள்ள ஒரே வழி இவருக்கு ஆதரவு வழங்குவதாகும்.ஆனால் இயற்கைச் சட்டம் சாவதற்கு முன்பு சரியாக அதன் தண்டனைகளை வழங்கியே தீரும் என்பதை பொதுமக்கள் கண்டு கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.