யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி சாருகா திருலிங்கம் நேற்று -11- அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாகத் திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும், அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளி களைப் பெற்றிருந்தவர் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
இவரது பெற்றோர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment