Header Ads



தாமரை மொட்டு குறித்து தவறான கருத்துகள் நாடெங்கும் பரவி வருகின்றன


தாமரை மொட்டு குறித்து தவறான கருத்துகள் நாடெங்கும் பரவி வருகின்றன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு சரியாகப் பதிலளிக்கப்படாவிட்டால், 3% பொய்களால் மக்களை ஏமாற்ற இடம் இருப்பதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய்ப் பிரசாரங்களைப் பரப்பி வருவதாகவும் இதன் விளைவாக அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குறித்து பல்வேறு தவறான கருத்துகள் நாட்டில் பரவத் தொடங்கியுள்ள தாகவும் இது குறித்து அரசாங்கத்தையும் கட்சியையும் பாதுகாக்க வேண்டியதுஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'2022 க்கான வரவு செலவு திட்டம்' என்ற தலைப்பில் கெஸ்பாவ பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.