Header Ads



விமான நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு - ஐ.எஸ், தலிபான்கள் நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் தொடர்பில் கவனம்


(தினகரன் பத்திரிகை)

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களையடுத்து கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி இரவு விமான நிலையத்திற்கு கிடைத்துள்ள ஈ மெயில் செய்தியையடுத்து இரண்டு சர்வதேச விமான நிலையங்களினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று எனினும் விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்கிணங்க விமான நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளில் விமானப்படையினர், விசேட பொலிஸ் குழு மற்றும் பொலிஸ் விசேட செயலணியினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.எஸ். ஐ.எஸ் மற்றும் தலிபான் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் அனைத்து புலனாய்வுப் பிரிவுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

4 comments:

  1. Mr.Laurence, isis தீவிரவாத அமைப்பு என்பதில் சந்தேகமில்லை ஆனால் தாலிபான்களை US & UN அஃகானிஸ்தானின் அரசாக அங்கீகரித்துள்ளது,இந்திய விபசார ஊடகங்களின் செய்திகளை கோப்பி & பெஸ்ட் செய்வதை நிறுத்தவும்.

    ReplyDelete
  2. 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🧐🧐🧐

    ReplyDelete
  3. இது மற்றொரு கபட நாடகத்தின் வௌிப்பாடு.

    ReplyDelete
  4. Correctta சொன்னீங்க, எங்கட நாட்ல அதிகமான அளவில் மன நோய் உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்டு சொன்னீங்க, வீதிள போற பாம்ப சீழகுள்ள போட்ட கதை தான் இது. (தலிபான்்நாட்டுக்குள் பெறவேசிப்பது)

    ReplyDelete

Powered by Blogger.