நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே, ஈஸ்டர் தாக்குதல் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும் - மல்கம் ரஞ்சித் அடம்பிடிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே பேராயர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனின், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என்று தனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றும் பேராயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நம்பகமான விசாரணைகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று கர்தினால் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment