ஈஸ்டர் தாக்குதல் சர்வதேசத்தின் நோக்கத்திற்காக நடத்தப்பட்டது, அதன் சூத்திரதாரி யார் என கண்டறிய முடியாது - ஞானசாரர்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரி யார் என கண்டறிய முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதல் சர்வதேசத்தின் நோக்கத்துக்காக நிறைவேற்றிக்கொள்ள நடத்தப்பட்ட ஒன்று.. எனவே இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என ஒருவரை மாத்திரம் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுடுவதைப்போல தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment