மத்திய வங்கி மக்களிடத்தில் கொள்ளையடிக்கிறது - கபீர்
மக்களிடத்தில் மத்திய வங்கி கொள்ளையடிக்கிறது. பெரும் தொகையில் பணம் அச்சிடப்படுகின்றது. இது உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம். மக்களின் ஆடைகளையும் களைந்துவிட்டது என்றார்.
85 கோடிக்கு மேல் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரூபாவின் பெறுமதியை இன்னும் குறைக்கும்.
ஆளும் தரப்பினர் ஆடை அணியவில்லை. இல்லையெனில், அவர்களின் ஆடைகளையும் அரசாங்கம் களைந்திருக்கும் என்றும் அவர் கிண்டல் செய்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றின்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment