Header Ads



விஜயரத்தினம் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய, இஷ்பா இர்ஷாட் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை


கபொத சாதாரணதரப் பரீட்சையில் நீர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய ISHFA IRSHAD 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

இவர் நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர் எம் எம் எம் இர்ஷாட் எம் எம் எப் றிஸ்மியா தம்பதிகளின் புதல்வி ஆவார்.   

இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை காட்டி வருபவர் ஆவார். அதாவது அகில இலங்கை ரீதியான தமிழ்மொழித் தினப் போட்டியில் முதலாமிடம் மற்றும் கவிதை ,கலை இலக்கிய போட்டிகளிலும் தமிழறிவு, போட்டிகளிலும் மாகாண வலய ரீதியான பல முதலிடங்களைப் பெற்று  வெற்றி பெற்றுள்ளமை இவரது திறமைக்கு சான்று பகர்கின்றன. 

அதேபோன்று CTMS நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச போட்டியிளர்களும் பங்குபற்றிய Motivational Speaker Competition 2021இல் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். 

இன்று பல தலைப்புக்களில் Motivation  கருத்துக்களை வெளியிட்டு வரும் இளம் Motivational Speaker உம் ஆவார். தொடர்ந்து இவர் முன்னேற்றம் காண இறைவன் துனை புரிவானாக.

7 comments:

  1. கல்வித்துறையில் மேலும் பல சாதனைகளை புரிந்திட எனது வாழ்த்துக்கள்
    - எம். ஜே.எம். தாஜுதீன்

    ReplyDelete
  2. May Allah guide you well in next level with your level best...

    ReplyDelete
  3. கல்வித்துறையில் மேலும் பல சாதனைகளை புரிந்திட எனது வாழ்த்துக்கள் -எம்.ஜே.எம். தாஜுதீன்

    ReplyDelete
  4. கல்வித்துறையில் மேலும் பல சாதனைகளை புரிந்திட எனது வாழ்த்துக்கள் -எம்.ஜே.எம். தாஜுதீன்

    ReplyDelete

Powered by Blogger.