Header Ads



இலங்கையில் கொரோனாவினால் மரணித்த 76 சதவீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் ஏற்றாதவர்கள் - Dr ஹம்தானி


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரில் 76 சதவீதமானோர், எந்தவிதமான கொரோனா தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என கோவிட் 19 இணைப்பாளர்,  சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை கல்வி வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரில் 18 சதவீதமானவர்கள் ஒரேயொரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 6 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்கள், பல்வே​றான தொற்றா நோய்களுக்கும் நீண்டநாள், நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.