Header Ads



50 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன், 400 கொள்கலன்களும் விடுவிப்பு


துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொகையை, 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் உள்ளன. தற்போது, அதில் 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.